Monday, May 9, 2011

அந்தப் பிஞ்சு மலர்களின் அழுத்தமான நிறத்தைக் கூட்ட ...

"ந்தக் காலங்களில் கிராமங்களில் ஐந்து வயதில் 'ஏடு தொடங்குதல்' என்று ஒரு சடங்கு செய்வார்கள். குழந்தையை உட்காரவைத்து தாம்பாளத்தில் அரிசியை பரப்பி குழந்தையின் விரலைப் பிடித்து 'அ னா ஆ வன்னா' எழுத வைப்பார்கள். அந்தச் சடங்கு கோயிலில் நடக்கும்.பிறகு,அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும் பனையோலைகளில் உயிரெழுத்து மட்டும் எழுதிக் கொடுத்து,படிக்கச் சொல்லித் தருவார்கள்.

அப்படி ஏடு துவங்கும் சடங்கைச் செய்து வைப்பதற்கென ஒரு அண்ணாவியும் இருப்பார்.அவர் தேவாரம்,திருவாசகம் பாடவும்,விளக்கிப் பொருள் சொல்லவும் தெரிந்தவராக இருப்பார்.பள்ளிக்கூடம் வந்தபிறகு ஏடு தொடங்குதல் மறைந்துப் போகத் தொடங்கியது.ஆனாலும் பள்ளியில் பிள்ளைகளுக்கு டீச்சர் கையைப் பிடித்து அ னா ஆ வன்னா என்றால் என்னவென்றே தெரியாத ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது."


* மா.அரங்கநாதன்