Monday, December 6, 2010

மறக்கமுடியுமா? 1

'செல்வி'ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில் மக்களனுபவித்த கொடுமைகளும் குறிப்பாக மாணவர்கள் சந்தித்த பேரிடர்களில் சில..
ஜெயலலிதாவின் திட்டங்கள் எல்லாம்  வெற்று அறிவிப்புகளாகவே நின்று விட்டதற்கு ஏராளாமான உதாரணங்கள் நாம் அளித்திட முடியும்.2002 ஆம் ஆண்டு இறுதியில் தூக்கத்திலிருந்து எழுந்தவரைப் போல திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.சென்னையிலிருந்து  40 கி.மீ. தெற்க்கே மாமல்லபுரத்துக்கு அருகில் மலேசிய அரசின் ஒத்துழைப்புடன் பல்லாயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமான் முறையில் தலைமை செயலகத்தை அமைக்கப் போவதாக அறிவித்தார்.அதோடு மறந்துவிட்ட செல்வி'ஜெயலலிதா திடீரென சுயநினைவு திரும்பியவராய் 4-4-2003 இல் சென்னை ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு,அந்த இடத்தில் தலைமை செயலகம் கட்டப்படுமென அறிவித்தார்.அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே மாணவிகள்,ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் என அனைவரும் சாலையில் அமர்ந்தனர்.மாணவிகளின் போராட்டம் பெருமளவிலே வெடித்தது.கல்லூரியை இடிக்கக்கூடாது என்கிற குரல் நான்கு புறங்களிலிருந்தும் ஓங்கி ஒலித்தது.தமிழினத்தின்  மூத்த தலைவரான தாங்கள் இப்பிரச்சினையில் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கலைஞரைச் சந்தித்து கல்லூரி மாணவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.சந்திப்பின்போது கல்லூரி மாணவிகளின் போராட்டத்திற்கு தி.மு.க.வின் தார்மீக ஆதரவு உண்டு என அறிவித்தார் கலைஞர்.மாணவிகளின் போராட்டம் பெருமளவிலேவெடித்தது. இதனையடுத்து  போராட்டத்தை முறியடிக்கும் விதமாக  5-4-2003 முதல் கல்லூரிக்கும்,விடுதிக்கும் விடுமுறை அறிவித்தது அரசு.ஆனால் மாணவிகளோ இரவு,பகலாக கல்லூரி வளாகத்திலேயே தங்கி தங்களது  போராட்டங்களை நடத்தினர்.கல்லூரி வழியாக சென்ற 'செல்வி'ஜெயலலிதாவின் காரை மாணவிகள் வழி மறிக்க முயன்றனர்.இதனால் மாணவிகள் மீது காவல்துறை  தடியடி நடத்தி ஐந்து மாணவிகளை காயப்படுத்தியது.இதன் பின்னர் செல்வி'ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும்  அவ்வழியை  தவிர்த்தார். மாணவிகளின் திட்டத்தை அறிந்திடவும்,மாணவிகளுடன் கலந்து உளவு வேலை செய்த பெண் காவலர் ஒருவா,மாணவிகளிடம் மாட்டிக்கொண்டு உதை வாங்கினார் .மாணவிகளின் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் இயக்கங்களும் (பா.ஜ.க.,அ.தி.மு.க. தவிர) தங்கள் தார்மீக ஆதரவைத் தெரிவித்தனர்.தி.மு.க. ஆதரவு தெரிவித்ததை அடுத்து,இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின்,சட்டமன்ற உறுப்பினர்கள்  எஸ்.ஏ.எம்.உசேன்,எ.வ.வேலு,பொன்முடி,ஜெ.அன்பழகன்,இள.புகழேந்தி மற்றும் பரணிகுமார் உள்ளிட்ட தி.மு.க.வினர் மாணவிகளை போராட்டக் களத்தில் சந்தித்து போராட்டம் வெற்றி பெற வாழ்த்தி தார்மீக ஆதரவு தெரிவித்தனர்.இராணி மேரிக் கல்லூரியை இடித்துவிடக்கூடாது என அரசியல் இயக்கங்களும் மாணவ அமைப்புகளும்,பொதுமக்களும் போராடியதற்கு காரணம் இல்லாமல் இல்லை.88 ஆண்டுகள் பழைமை மிக்கதான இராணி மேரிக் கல்லூரி,இந்தியாவிலேயே முதல் மகளிர் கல்லூரியாகும்.இக்கல்லூரி வளாகத்தினுள் அமைந்துள்ள 26 கட்டிடங்களில் பெரும்பான்மையானவை அறிய கலைத்தன்மை கொண்டவை என கட்டிடக் கலை வல்லுனர்கள் கூறினார்கள் .இதில் படிக்கிற 3000க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் பெரும்பாலானோர் நடுத்தர,ஏழைச் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களான பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்டவர்களின் வீடு பிள்ளைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் எனக் கூறிய  செல்வி'ஜெயலலிதா யார் தெரியுமா? ரேசனில் வழங்கும்  அரிசி விலையை உயர்த்தவர் மாட்டேன் எனக் கூறி சில நாட்களில் உயர்த்தியவர்தான்.விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யவே மாட்டேன் என அறிவித்து சில மாதங்களிலேயே ரத்து செய்தவர்தான்.இப்படி,தான் சொல்லுவதை எல்லாம் வாக்குத் தவறாமல் செயல் படுத்திய 'செல்வி'ஜெயலலிதா இராணி மேரிக் கல்லூரிக்கு  மாற்று இடம் வழங்குவோம் என அறிவித்தார்.ஏற்கனவே செல்வி'ஜெயலலிதாவின் ஏராளமான வாக்குறுதிகளை  பார்த்திருந்த  மாணவர் சமுதாயம் இவ்வாக்குறுதியை நமபத்தயாராக இல்லை.கல்லூரி இடிக்கப்பட மாட்டாது என முறையாக அரசு அறிவிக்கிற வரை  மாணவிகளின் போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.இக்கல்லூரியின் முன்னாள் மாணவியான 102 வயது நிரம்பிய மூதாட்டி ஆலிவ்பால் கல்லூரியை இடிக்கவே கூடாது எனவும் பழுதடைந்திருந்தால் அதனை புனரமைக்க மாணவிகளின் சார்பாக ஒரு கோடி ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும் அறிவித்து போராட்டத்தில் இறங்கினார்.கல்லூரி மாணவிகளின் போராட்டம் மேலும் வலுவடைந்தது.கல்லூரி இடிக்கபடக்கூடாதென தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 6-4-2003 அன்று கல்லூரியை இடிக்க இடைக்காலத் தடைவிதித்தது நீதிமன்றம்.இத்தடை உத்தரவுக்கு பின்னர் போராட்டத்தில் வேகம் குறைந்ததே தவிர நின்று விடவில்லை,இடிக்கவே கூடாது என நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையிலோ அல்லது இடிக்கவே மாட்டோம் என அரசு அறிவிக்கும் வரையிலோ எங்களின் போராட்டம் தொடருமென அறிவித்தனர் மாணவியர்.ஆனால் மாணவிகளை மிரட்டும் பணியிலும் 10-4-2003இல் நடக்கவிருந்த அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை திசை திருப்பும் வகையிலும் 9-4-2003 அன்று நள்ளிரவில்,கல்லூரிக்குள் அத்துமீறி முழைந்து மாணவிகளி போராட தூண்டினார் எனவும் காவலாளியை மிரட்டினார் எனவும் கூறி ஸ்டாலினின்  வீட்டினுள் காவல்துறை அடாவடி முறையில் எகிறிக் குதித்து அவரை கைது செய்தது.கைது நடவடிக்கையின்போது ஸ்டாலினுடன் இருந்த உசேன்,பொன்முடி,அன்பழகன் உள்ளிட்டோரும் கைது செய்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.இப்படி தான்தோன்றி தனமாக காட்டாட்ச்சி நடத்திய செல்வி'ஜெயலலிதாவை அடுத்து வரும்  சட்டமன்ற தேர்தலில் முதல்வராக்கியே தீருவது என ஒரு கூட்டம் செயல் பட்டுக் கொண்டிருப்பதை பார்க்கையில்,இது போன்ற செயல்களையெல்லாம்  மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடுவார்கள் என்று நினைத்த அந்த கூட்டத்தை என்னவென்று சொல்வது.

Friday, August 20, 2010

Landscape in the Mist..

இரு தினங்களுக்கு முன் ஓர் இரவில்..ஒரு திரைப்படம் கண்டேன்! இந்த படம் தங்களுடைய தந்தையைத்தேடி செல்லும் இரு குழந்தைகள் பற்றிய கதை.voula என்ற பெண் தன் தம்பியுடன் அவர்களின் தந்தையின் இருப்பிடத்தை அறிய, பல தடவை முயன்று இறுதியாக ஓர் இரவில் ஜெர்மனி நோக்கி தங்களின் ரயில் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்லும் அவர்களை டிக்கெட் பரிசோதகர் கண்டுபிடித்து அடுத்து நிற்கும் OINOH என்னும் ஸ்டேஷனில் இறக்கி கார்டிடம் ஒப்படைக்கிறார்..அங்கிருக்கும் அவரோ நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேள்வி கேட்க்கிறார்..அதற்க்கு அவர்கள் இருவரும் வேறு யாரையோ கேள்வி கேட்பது மாதிரி பென்ச்சில் அமர்ந்துகொண்டிருக்கிரார்கள்.இதை பொறுக்கமுடியாத அவரோ உடனே அவர் போனை எடுத்து போலீசை அழைக்கும் தருணத்தில் அந்த சிறுமி "நாங்கள் எங்க மாமாவை பார்க்க வந்தோம்" என்று சொல்கிறாள்.இதெல்லாம் அந்த ஓர் இரவிலேயே நடந்து முடிக்க,மறுநாள் ஒரு போலீஸ்காரர் அந்த இருவரையும் அழைத்துக்கொண்டு, அவர்களின் மாமா இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்.அவர் இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.."நீங்க எப்படி இங்க" என்று பாசத்தோடு தழுவி அனைத்து செல்கிறார் என்றுதான் நானும் நினைதேன்.ஆனால் உடன் வந்த போலீஸ்காரரிடம் தன்னுடைய சிகரெட் ஒன்றை கொடுத்து, "இவர்களின் அம்மா இவர்களிடம் பொய் சொல்லிருக்கா என்றும்.. இவர்களின் தந்தை ஜெர்மனியில் இல்லை" ஆகையால் இவர்களை நான் ஏற்கமுடியாது என தன் புலம்பலை கொட்டி தீர்த்துக்கொண்டிருக்கையில்..அந்த சிறுமி இதை கேட்டு விடுகிறாள்.உடனே இல்லை நீ பொய் சொல்கிறாய்,எண்களின் தந்தை ஜெர்மனியில் தான் உள்ளார் என்று கத்திவிட்டு கோபித்து கொண்டு மீண்டும் அந்த போலீஸ்காரரிடமே காவல் நிலையம் சென்று விடுகின்றனர். போலீஸ் ஸ்டேஷனின் பென்ச்சில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, அந்த ஊரில் திடீரென பனிபொழிவு ஏற்படுவதை அனைவரும் இன்பப்பெருக்கோடு ரசித்துக்கொண்டிருக்கையில் இவர்கள் இருவரும் நைசாக ஜூட் விடுகிறார்கள்..அப்படியேசுற்றித்திரிந்து ஒரு நேஷனல் ஐவேஸ் மாதிரியான ஒரு சாலையில்,ஒரு பஞ்ச்சர் ஆனா கேரவன் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது அந்த டிரைவரும் அதை பழுதுபார்த்து பின் இவர்களை நோக்கி இங்கிருந்து ஊருக்குள் செல்வது ரொம்ப தூரம் என்றும்,தன் வண்டியிலேயே அவர்களை அழைத்து சென்று ஊருக்குள் விடுவதாகவும் கூறுகிறார்.அதில் போகலாமா?வேண்டாமா? என்ற தயக்கத்திலேயே கால்கள் மெல்ல நடக்கிறது,பிறகு மறுபடியும் அந்த டிரைவர் அழைத்ததும் அதில் ஏறிக்கொள்கிறார்கள்.அந்த வண்டியினுள் தொங்கும் அங்கிகளே அவர் நாடக துறையை சேர்ந்தவர் என்று சொல்லிவிடுகிறது,அந்த சிறுவனிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே அந்த கேரவன் சேரவேண்டிய இடம் வந்து நிற்கிறது..அங்கு அந்த சிறுவன் அந்த நாடக குழுவைப்பார்க்கிறான்..தான் வெளியில் சென்றுவருவதாகக்கூறி ஒரேச்ட்ஸ் என்ற அந்த நாடக நடிகன் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்புகிறான்...இந்த சிறுவனோ பசித் தாங்காமல் கேரவனில் தூங்கி கொண்டிருக்கும் தன் அக்காவை எழுப்பாமல் ,இறை தேடி ஓர் உணவகம் செல்கிறான் அங்கு தனக்கு "பிரட் கொடு..!" என்று கேட்க்கிறான்..அதற்க்கு அவர் "காசு இருக்கா.." என்று இந்த சிறுவனை பார்த்து கேட்க்கிறார் எதற்கும் அசராமல் "இருந்தா கொடுக்க மாட்டேனா எனக்கு பசிக்குது,பிரட் கொடு..!" என்று மீண்டும் கேட்க்கும்போது.."சரி உனக்கு பிரட் வேணும்னா இங்க இருக்கிற மேஜைகள் எல்லாத்தையும் சுத்தம் பண்ணிட்டு அதுக்கு சம்பளமா நீ கேட்ட ப்ரெட்ஆ வாங்கிட்டு போ...!" என்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார் .உடனே அந்த சிறுவன் மேஜைகளை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறான்..அப்போ அங்கு வரும் ஒரு வயலின்காரர் (நம்மூர்ல சாட்டையடிச்சிட்டு காசு கேப்பாங்களே அது மாதிரி)உள்ளே நுழைகிறார். அவர் இந்த சிறுவனை பார்த்ததும் வணக்கம் தெரிவித்து வயலினை இசைக்க ஆரம்பிக்கிறார்,உடனே இந்த சிறுவனும் மேஜைகளை சுத்தம் செய்வதை நிறுத்திவிட்டு அங்கு இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து அந்த இசையை ரசிக்கிறான்.. அவ்வளவு வலி நிறைந்த இசை அது... சத்தம் கேட்டு உள்ளே இருந்து வரும் அந்த கடைக்காரர் அவரை துரத்துகிறார்..அந்த இசை முடிந்த பிறகு அந்த சிறுவன் எல்லாவற்றையும் மறந்து கைத்தட்டுகிறான்..உடனே அந்த ஓட்டல்காரர் அவனை முறைக்க மீண்டும் தன் வேலையை தொடர்கிறான் அந்த சிறுவன்.இதற்கிடையில் தன் தம்பியை தான் தொலைத்து விட்டதாக நினைத்து தேடிக்கொண்டிருக்கிற voula தன் தம்பியை சந்திக்கும் அந்த காட்சி ரொம்பவே உணர்வுபூர்வமானது..தன்அக்காவை பார்த்து அந்த சிறுவன் "நான் வேலைசெய்து உனக்கு பிரட் வாங்கி வந்திருக்கிறேன்..!" என்று சொல்லும்போது..அவள் அவனை கட்டி அணைத்து அழுகிறாள். அந்தநாள் நாள் அப்படியே செல்ல, மெல்ல அந்த நாடக கோஷ்டியிடம் இருந்தும் இவர்கள் விலகிச்செல்ல முற்படும்போதுதான், ஒரு மழைநாளில் அகலமான சாலையில் இருவரும் நடந்துகொண்டிருக்கிறார்கள்.அந்த சிறுவன் தன்னால் இதற்க்கு மேல் நடக்க முடியாது என்று அந்த மழை பொழியும் சாலையிலேயே அமர்ந்துவிடுகிறான். உடனே இவள் சாலையில் சென்றுகொண்டிருக்கும் வாகனங்களை எல்லாம் மறித்து லிப்ட் கேட்க்கிறாள்.மறுபடியும் அவர்களுக்கு ஒரு வண்டி கிடைக்கிறது அது பெரிய கூட்ஸ் கார்ரியர் மாதிரி ஒரு வண்டி.அந்த டிரைவரும் அவர்கள் போகவேண்டிய இடத்தை கேட்டு ஏற்றி கொண்டு செல்கிறார்.இரவு ஒரு உணவகத்தில் வண்டி நிற்கிறது மூவரும் சாப்பிட இறங்குகிறார்கள் டிரைவர் தனக்கு சரக்கு போட்டுக்கொண்டும் அந்த இருவருக்கும் அவர்களின் பசியை தீர்த்தும் அந்த இடத்தை காலி செய்கிறார். மீண்டும் வண்டி அங்கிருந்து கிளம்புகிறது.. இரவு முழுதும் வண்டி ஓட்டிய களைப்பில்,வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி தான் தூங்கபோவதாக சொல்லி இறங்குகிறார்.அவர் இறங்கிவிட்டு அந்த சிறுமியையும் இறங்க வற்புறுத்துகிறார் கீழே இறங்கும் அந்த சிறுமி அந்த டிரைவரின் கையை உதறிவிட்டு ஓட முயல்கிறாள்..ஆனால் அந்த டிரைவரோ விடாமல் துரத்தி சென்று பிடித்து தன லாரியின் பின் பக்கத்தில் தூக்கி உள்ளே தள்ளி இவரும் உள்ளே ஏறுகிறார்.கொஞ்சநேரம்.. அமைதி,மௌனம்,பரபரப்பின்மை எல்லாம் முடிந்து அந்த டிரைவர் தன கலைந்த உடைகளை சரி செய்தவாறே கீழே குதிக்கிறார்.இவர் இறங்கிய கொஞ்ச நேரத்தில் அந்த சிறுமி மெல்லமாக தன் கால்களை நகர்த்தி ரொம்ப பொறுமையாக கலைந்த தலை முடியோடும்,களையப்பட்ட தன் ஆடைகளோடும் அந்த வண்டியிலேயே அமர்ந்துகொண்டிருக்கிறாள் அப்பொழுது திரையில் தோன்றும் அந்த காட்சி உண்மையிலேயே..இந்த படத்தை பார்க்கும் அனைவரின் உள்ளமும் வயது,இனம்,மொழி,பாலினம் என்ற அனைத்தையும் கடந்து வெறும் சக மனிதனாக மட்டுமே உணர்ந்து அழும்..இந்த படத்தை பார்க்கும் அனைவரின் உதடுகளும் மௌனத்தை மரணிக்கசெய்யும்.


இந்த படத்தில் ஆரம்ப காட்சி முதல் திரையில் ஒலிக்கும் அந்த இசை மனதை மயக்கம் கொள்ள செய்யாமல் அந்த இரு குழந்தைகளின் வலியை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.அந்த இருவரும் சாலைகள் எங்கும் சுற்றி திரியும் காட்சிகள் எல்லாம் மிகவும் நேர்த்தியாக படம்பிடிக்கிப்பட்டிருப்பது ரொம்பவே அழகு என்பதைவிட ரொம்பவே எதார்த்தம்.குறிப்பாக ஒரு குதிரை இறக்கும் காட்சியை ,வயதால் மட்டுமே வளர்ந்த மனிதர்களையும் அந்த இரண்டு குழந்தைகளையும் வைத்து மனித நேயத்தை சொல்லும் காட்சி நம் முகத்தில் நம்மையே காறித்துப்ப வைத்துள்ளார் இயக்குனர்.அந்த இரு குழந்தைகளும் ரயிலில் பயணிக்கும் மற்றொரு காட்சியில் தன் தந்தைக்கு தன் மனதிற்குள்ளேயே மடல் தீட்டும் காட்சியிலும் சரி.அந்த வலிகளை தாங்கியே பயணிக்கிறது கதை.கடைசியாய் திரையில் தோன்றிய அந்தக்காட்சி என் நினைவிற்குள் ஊடுருவும்போதெல்லாம்மீதி படத்தை பார்க்கும் வாய்ப்பை நான் பெறுவேனா..என்பது சந்தேகமே.

Tuesday, August 17, 2010

பெண்ணொருத்தி..என்னிடத்தில்..



இன்று மாலை கடுமையான வேலை பளுவுக்கு இடையில் ஒரு செல்பேசி அழைப்பு...!! ஏற்கனவே இரு அழைப்புகளை எதிர்பார்த்துகொண்டிருந்த காரணத்தினாலோ என்னவோ நான்கைந்து மணிக்குள்ளாகவே அழைப்பை ஏற்றேன்..மறுமுனையில் ஒரு பெண்!!அவளுடைய வயது ஏறத்தாழ 22ல் இருந்து 24 வரை இருக்கலாம் என்பது என் அனுமானம்.எடுத்த உடன் யார் என்று கேட்டதற்கு,"உங்க பேர் என்ன..!!" என்று மறுமுனையில் ஒரு வழ வழ குழ குழ குரலில் ஒலித்தது என்னுடைய கோபத்தையும் நான் வெளிக்காட்டாமல் என் பெயரை நான் குறிப்பிட்டேன் ..உடனே அம்முனயிலிருந்து "இவ்ளோ அசிங்கமாவா மெசேஜ் அனுப்பறது..!!" என்று அவளுடைய கோபத்தை கக்கினாள்.....அதிர்ந்து போன நான்! ஒரு சின்ன தடுமாற்றத்திற்கு பிறகு சுதாரித்துக்கொண்டு.."முதல்ல நீ யாரு,எங்கிருந்து பேசற,என்ன நம்பர்,யாரு உனக்கு மெசேஜ் அனுப்புனா..என்று ஒரு குழப்பத்தோடவே பட்டியலிட்டேன்..மறுபடியும் அந்த முனையிலிருந்து "உங்க பிரெண்ட்ஸ்குள்ள இப்படி பேசிக்கலாம்..!யாருக்கு அனுப்புரோம்னு நம்பர் கரெக்டா செக் பண்ணி அனுப்புங்க..எவ்ளோ அசிகமா இருக்கு தெரியுமா இந்த மெசேஜ் ..என்னால சொல்லக்கூ".............. !!!பணிக்காலம் விரயமாவதை விரும்பாத உயரதிகாரி,தன் குரல் கணைப்பில்..என் அலுவல் தொடர என்னை பணித்தார்..!!அந்த உரையாடல் என்னால் துண்டிக்கப்பட்டது..பணிதொடர்ந்த பின்பும் ஒரே குழப்பம்..நான் பொதுவா நண்பர்களோடு குறுஞ்செய்தியில் உரையாடுவாது கிடையாது.அப்படியே இருந்தாலும் அது ரொம்ப ரொம்ப அரிதான ஒரு செயலாகத்தான் அமையும்.அதுவும் தெரியாதவர்களிடத்தில் நிச்சயமாக இருக்க முடியாது. என்னுடைய செல்பேசியை யாரும் உபயோகப்படுத்தவும் இல்லை அப்படி இருக்க இது எப்படி சாத்தியமாகமுடியும்...! ஆனா ஒன்னு..கடைசி வரைக்கும் வாங்க போங்கனு மரியாதையாதான் பேசினா..ஒரு வேலை யாராவது என்னை கும்மியடிக்க செய்திருக்கலாமோ.. என்று தோன்றியதைத்தவிர வேறெதுவும் எனக்கு தோன்றவில்லை.. விளையாட்டாக இப்படி ஒரு செயலை செய்திருப்பாயின்.. அவள் பெண் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருப்பவரே தவிர பெண் அல்ல என்பதுதான் என்னுடைய திண்ணமான எண்ணம்.. காபி இடைவேளையில் என் தோழி ஒருத்தியை தொடர்பு கொண்டு நடந்தவைகளை விவரித்தேன்..அவளுக்கு ஒன்றுமே புரியாத நிலையில்(எனக்கு சுத்தினத விட அவளுக்கு அதிகமாவே சுத்திடிச்சு..) எனக்கு அழைப்பு வந்த ennai அவளிடம் கொடுத்து அது யார்???என்று விசாரித்து தகவல் சொல்லும்படி உதவி கோரினேன்..அதற்க்கு அவளும் ,"சரிடா.. ஆத்திரபடாத.. உன் வேலைய பாரு இத நான் பாத்துகுறேண்டா.." என்று அவள் சொன்னபோது தோழி என்ற வார்த்தைக்கான பொருளை எனக்கு உணர்த்தினாள்... இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..என் செய்ய ஸ்ரீதேவி என்று உண்டென்றால்,மூதேவி என்ற ஒன்றும் இருக்கத்தானே செய்கிறது.

Sunday, August 8, 2010

வாக்க-வாக்காவும்!!!பீர் பாட்டிலும்!!!

போன சாட்டர்டே அன்னைக்கு இரவு பிரெண்ட்ஸ் எல்லோரையும் பார்த்துவிட்டு,ஊரெல்லாம் சுற்றிவிட்டு சரி வீட்டிற்கு கிளம்பலாம்..என்று நினைத்த நேரத்தில் தான்..... அது நிகழ்ந்தது. ஆம்! ஒரு தொலைபேசி அழைப்பு என் அலுவலக நண்பரிடமிருந்து இன்னைக்கு சாட்டர்டே நைட்டு! அதனால எல்லோரும் வெளியில நைட் அவுட்டு போகிறோம், அதனால நீயும் சீக்கிரம் வந்து சேரு'னு சொல்லி என் விருப்பம் கேட்காமலே, அவர் விருப்பத்தை மட்டும் சொல்லி தொடர்பை துண்டித்தார்!.அப்பொழுது எனக்கு தோன்றியது இரண்டே விஷயங்கள் தான்,ஒன்று என் மக்களை தவிர எவருடனும் இதுவரை இது போன்ற இடங்களுக்கு சென்றதில்லை,இவங்க நம்மளை அழைக்கிராங்களே! என்பது.மற்றோன்று வேற என்ன சாப்பாடுதான்.. இவனுங்க சரக்கு அடிச்சிட்டு என்ஜாய் பண்ணிக்குவாங்க,நாம் குடிக்கிற பழக்கத்த இன்னும் ஆரம்பிக்கில வேற,நாம சாப்பாட்டுக்கு என்ன பண்றது'னு அப்புறம் அடுத்த ஐந்து நிமிடத்தில் எனக்குள் ஓர் அவசர பொதுக்குழு கூட்டி!!போகலாம் என தீர்மானம் நிறைவேற்றி!!! அதை அடுத்த சில மணிகளில் நிறைவேற்றியும் விட்டேன்!!!!!!!..அடுத்த இருபது நிமிடங்களுக்கு "எங்க இருக்க"," எங்க இருக்க"னு கால் மேல கால போட்டு, ....கால் வலிச்சதோ இல்லையோ....என் வாய் வலிச்சது தான் மிச்சம்! இதுபோன்ற நேரங்களிலெல்லாம் என் மக்களை நினைத்து பெருமை பட்டுக்கொள்வேன். ஒரு வழியாக எல்லாரும் அசம்பல் ஆகி,இந்த பரபரப்பான சென்னையின்... அந்த பரபரப்பின்றி காணப்பட்ட அந்த 'பப்'இன் பார்கிங்கிர்க்கு வந்து சேர்ந்தோம்!ஒரு நிமிடம் அப்போதும் என் மக்களின் நினைவு என்னை விட்டு நீங்க மறந்து நான் 'பப்'ற்கு போகும் இந்நிகழ்வை என் மக்கள் கேள்விப்பட்டால்..எப்படி ரியாக்ட் பானுவாங்குன்னு நெனச்சு உள்ளுக்குள்ள சிரிச்சிட்டு இருந்தேன்.சரி உள்ளார போகலாம்னு சொல்லி சுவைத்துகொண்டிருந்த தம்மை என் காலடிக்கு காணிக்கையாக்கி ( இந்த டயருக்கு கீழ எலுமிச்சை ஜூஸ் போடுவாங்களே அது மாதிரி )உள்ளே நுழைந்தோம்.எங்களுக்கு முன் நடந்து போய் கொண்டிருந்த அந்த பெண்ணின் முதுகை பார்த்த பின் ஒரு வேலை அவரும் நித்யானந்தாவின ரசிகையாக இருப்பாரோ என்னவோ என்று எனக்குள்ளே ஒரு பதில் சொல்லிகொண்டேன்,ஏன்னா ஜன்னலை திறந்துவையுங்கள் காற்று உள்ளே வரட்டும்'னு அவர்தானே சொல்லிருக்கார்!..இப்படியாக ஒவ்வொருவருவருக்கும் ஒரு கமெண்டை உள்ளுக்குள் உரித்தாக்கி லிப்டிற்க்குள் சென்றோம்.நான் பொறுமையாக நடந்து செல்கையில் வழக்கம் போல் உடன் வந்தவர்கள் ரெஜிஸ்ட்ரேஷன் லொட்டு,லொசுக்கு எல்லாம் முடித்து முடித்து என்னை அழைத்தார்கள்.நானும் பாதி முடித்த தம்மை மீதி அப்படியே போட்டுவிட்டு அதற்க்கு அப்பவே மரணதண்டனை நிறைவேற்றினேன். உள்ளே நுழைவதற்கு முன் என்ட்ரன்ஸ்லேய ஈ.பி.32 ஆயில் பாரல் மாதிரி ஒரு உருவம் கார்கோஸ்அண்ட் ரவுண்ட் நெக் பனியன் போட்டுக்கொண்டு நான் பவுன்செர் என்று சொல்லாமல் சொன்னார்..(நாம ஏன் அந்த பக்கம் போறோம்.)கதவை திறந்து உள்ளே செல்வதற்குள் என் னோடு வந்த எல்லா மக்காக்களும் உள்ளே நுழைந்திருந்தார்கள்.நானும் உள் போயி எதெது எங்கெங்கே இருக்கு டான்ஸ் ப்ளோர் எவ்வளவு பெரிசு,சரக்கு ரேட் எவ்ளோ,சைடுடிஷ் எவ்ளோ,டீஜே பேரு என்ன,எதனை மணிக்கு க்ளோசிங் டைம்'னெல்லாம் என்கொயிரில ஈடுபட்டிருந்த நண்பரை அழைத்து சேகரித்த தகவல்களை தரவிறக்கம் செய்துமுடித்தேன். பீரோ..ஹாட்டோ!!எடுத்தாலும் இருநூறு ரூபாயாம்..ஆனா கோக்கு பெப்சி எல்லாம் ஆடித்தள்ளுபடியோ என்னமோ எல்லாம் பாதி ரேட்டுதான் ஈச் 100 ரூபாய்.ம்யூசிக் ஒன்னும் சொல்லும்படியா இல்லைன்னு'தான் தோணுது,திடீரென்று ஷக்கிராவின் வாக்கா-வாக்கா பாடல் ஒலிக்க இளசுகள் எல்லாம் ஒரே ஆராவாரம்தான்..நான் இந்த 'பப்'பின் தரத்தை அறிவதற்கு எனக்கு அது உதவியது.தொடர்ந்து நான் கேட்டிராத பாடல்களே ஒலித்துகொண்டிருக்க திடீரென்று ஒலித்தது..ப்ளோரிடா!!!!.ஒரே டான்சுதான் போங்க. மறுபடியும் மொக்கயாவே போக புகைபிடிக்க எழுந்துசென்றேன்.. புகையைவிட வேகமாய்!!.வெளியில் எனக்கு முன்னாடியே நிறையபேர் வெளிய சிக்குபுக்கிகொண்டிருந்தார்கள்.ஆண் பெண்ணின் அந்த சம நிலைமையை அங்குதான் காண முடிந்தது எனக்கு!!.ஆண்கள் வெளியே வெறும் தம்மு மட்டும் அடித்துகொண்டிருக்கையில் பெண்கள் கையில் கூடுதலாக பீர்பாட்டில்!!! மீண்டும் உள்ளே சென்றால் டான்ஸ் ப்ளோர் நிரம்பி வழிந்தது பெரும்பாலும் பெண்கள்தான்.எனக்கு ஆரம்பத்திலிருந்தே டவுட்டுதான்,இந்த பெண்களெல்லாம் வாடிக்கையாளர்களா, இல்ல இவனுங்களே செட் பண்ணி ஆட வைக்குரானுங்கலானு!.. யோசித்துக்கொண்டிருக்கயிலே ஒலித்தது ரெஹமானின் மசாக்கஅலீ நன்றாக மிக்ஸ் செய்யபட்டிருந்தது.எந்திரிச்சு ஒரே குத்தாட்டம்தான் போங்க...அன்னைக்கு அந்த டீஜே'வோட பிறந்தநாளாம் இடையில அவன் வேற பேசி பேசி கடுப்பேத்திட்டு இருந்தான்.மறுபடியும் தம் போட வெளியில வரும் போது நிறைய வெளிநாட்டினர் நீக்ரோஸ் உட்பட ஆண் பேதமின்றி கட்டியனைத்துகொண்டு புகையை ருசிக்க அது மரிஜோனவாக இருந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம்.தம்மடித்து கொண்டிருக்கையில் தான் யோசித்தேன் இதில் எத்தனை பேர் வீட்டில் பொய் சொல்லி வந்திருப்பார்கள் எத்தனை பேர் வெறும் சரக்கிற்கும் ம்யூசிக்கிற்கும் மட்டும் வந்திருப்பார்கள்..என்று!மறுபடியும் உள்ளே சென்றோம்..உள்ளே போன பத்து நிமிஷத்துல எல்லா லயிட்டையும் போட்டுடானுங்க ரொம்ப கடுப்பாயிடிச்சு.மறுபடியும் வெளியே தம்மடிக்கலாம்'னு வெளியே கிளம்ப அப்பாவின் நம்பரிலிருந்து அழைப்பு!!என்ன படம் முடிஞ்சிடிச்சா...ம்ம் கெளம்பிட்டேன் தோ.. வந்திட்டு இருக்கேன்'னு போன கட் பண்ணிட்டு அடுத்த அரைமணி நேரத்தில் வீடு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Monday, July 26, 2010

தோ..வந்துட்டேன்...

கட்டட வேலை நடந்துட்டு இருக்கு!!!.. கூடிய சீக்கிரம் உங்கள மீட் பண்றேன்..மறுபடியும் வருவேன்..